வடக்கு சிவகாமியாபுரத்தில் செப்டிக் டேங்கில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை மீட்ட ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள்
வடக்கு சிவகாமியாபுரத்தில் செப்டிக் டேங்கில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை மீட்ட ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் ஆலங்குளம். மே. 19 ஆலங்குளம் அருகே வடக்கு சிவகாமியாபுரத்தில் செப்டிக் டெங்கில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். செப்டிக்டேங்கில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்பு வீரா்கள் மீட்கும் காட்சி வீடியோ மற்றும் புகைப்படம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வடக்கு சிவகாமியாபரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் வீட்டின் பின் புறம் புதியதாக செப்டிக் டேங் கட்டியுள்ளார். இது சரியாக நிலையில் இருந்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பகுதியில் மாடுகள் ஒன்றுக்கொண்டு சண்டையிட்ட போது கன்றுக்குட்டி ஒன்று செப்டிக் டேங்கில் தவறிவிழுந்தது. இது குறித்து தகவல் அறிந்தும் ஆலங்குளம் நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கயிறு கட்டி செப்டிக் டேங்கில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை லாகவமாக மீட்டனர். உரிமையாளரிடம் கன்று ஒப்படைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் ஆலங்குளம் தீயணைப்பு வீரர்களை பாராட்டினர்.